கவலையை பறிக்கும் 
கவலையைக் கொடுக்கும் 
கற்பனையை தாங்கும் 
கண் காணாத தேசம் வரை 
கதை கதையாக சுமக்கும்... 

சோதனையும் புரியும் 
சாதனையும் புரியும் 
வேதனையும் கொடுக்கும் 
மன தென்பையும் கொடுக்கும்.... 

அன்பையும் பெருக்கும் 
வம்பையும் வளர்க்கும் 
அழவும் வைக்கும் 
ஆர்வத்தையும் தூண்டும்..... 

முகம் அறியா உறவுகளை இணைக்கும் 
முகம் சுழிப்போரையும் அழைக்கும் 
முடிந்த வரை நன்மையும் கொடுக்கும் 
முடியலடா சாமி என்று புலம்பையும் வைக்கும் ... 

சிக்கில்லா நூல் 
சிந்தனை வளர்க்கும் நூல் 
சிக்கல் கொடுக்கும் நூல் 
சிரிக்க வைக்கும் நூல் 
சில நன்மை பல தீமை வழங்கும் நூல் 
இவைதான் முகநூல்....
நன்றி:- எழுது 

0 comments:

Post a Comment

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top