"முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைத்துவமோ அடி மட்டத்திலிருந்து உருவாகாமல் மேல் மட்டத்திலிருந்து முஸ்லிம் சமூகத்தின் மீது திணிக்கபடுகின்றது .ஆட்சியிலிருக்கும் கட்சிக்கு மிகவும் விசுவாசமயிருக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு அமைச்சர் பதவிகள் . இதனால் முஸ்லிம் அமைச்சர்களும் - அரை அமைச்சர்களும் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதிகளும்தான் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் என்ற மாயை  உருவக்கப்பட்டுள்ளது ."

  "முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் உணர்வுகளை பாராளுமன்றத்தில் பிரதிபளிப்பதற்குப் பதிலாக அவர்களின் தொகுதிகளிலும் பிரதேசங்களிலும் உள்ள முஸ்லிம்களுக்கு மத்தியில் பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் முகவர்களாகப் பணியாற்றுகின்றார்கள் .முஸ்லிம்களின் உணர்வுகள் மூடி மறைக்கப்படுவது ஒரு புறமிருக்க - முஸ்லிம்களின் அபிலாசைகளுக்கு முரணான ஒரு நிலையை சோடித்துக் காண்பிப்பதற்கும்  இப்பிரதிநிதிகள் பயன்படுத்தபடுகின்றனர்."

"முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தில் எவ்வலவு தூரம் அரசியல் நாணயத்துடன் வாழப்போகின்றது என்பதில்தான் எல்லாமே தங்கியுள்ளது. அத்தகைய மதிப்பை பெற்றுத் தரப்போகின்றவர்கள் யார்? இன்றைய பாராளுமன்ற பிரதிநிதிகளா ??"
Next
Newer Post
Previous
This is the last post.

0 comments:

Post a Comment

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top