
பலஸ்தீனில் யூதர்களை குடியமர்த்த 150 மில்லியன் பவுண்களை சுல்தானுக்கு பரிசாகத் தருவதாகக் கூறினார். ஆனால் ஹேர்ஸிலை சந்திக்க சுல்தான் அப்துல் ஹமீத் அவர்கள் மறுப்புத் தெரிவித்தார். அமைச்சரவை கூட்டி சுல்தான் பின்வருமாறு உரையாற்றினார்"பலஸ்தீனை பணம் கொடுத்து வாங்குவதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டாம் என்று ஹெர்ஸிக்கு அறிவிக்கவும். பலஸ்தீனின் ஒரு பிடி மண்ணை கொடுக்கவும் நான் அனுமதிக்க மாட்டேன். முஸ்லிம் உம்மத் தனது இரத்தத்தை தண்ணீராக புனித புமியில் தியாகம் செய்திருக்கிறது. யூதர்களின் பணத்தை அவர்களே வைத்துக்கொள்ளட்டும். இஸ்லாமிய கிலாபத் ஒழிக்கப்படும் நாளில் பணம் கொடுக்காமலேயே அவர்கள் பலஸ்தீனை பெற்றுக்கொள்ளட்டும். நான் உயிரோடுக்கும் போது பலஸ்தீன் துண்டாடப்படுவதை விட எனது உடல் வாளால் வெட்டப்படுவதையே விருகிறேன். சுல்தான் 2ம் அப்துல் ஹமீதை கொலை செய்வதற்காக பல தடகைள் முயற்சிகள் கைகூடவில்லை. இறுதியாக ஆர்மேனிய புரட்சிகர சம்மேளனம் என்று அழைக்கப்படும் Armenian Revolutionary Federation சுல்தானை கொலை செய்வதற்கான திட்டங்களை வகுக்க ஆரம்பித்தார்கள். சுல்தான் 2ம் அப்துல் ஹமீத் அவர்கள் ஸ்தான்பூல் நகரில் அமைந்துள்ள யில்திஸ் பள்ளிவாசலில் ஜூம்ஆ தெர்ழுகையை நிறைவேற்றுவதை வழக்கப்படுத்திக்கொண்டிருந்தார்கள். சுல்தான் அவர்கள் ஜூம்ஆத் தொழுகையை நிறைவேற்றி வெளியேறும் போது குண்டை வெடிக்கச் செய்வது இவர்களின் இலக்காக இருந்தது. உஸ்மானிய கடற்படை 1900ம் ஆண்டு காலப்பகுதியில் பிரித்தானியா, பிரான்ஸ் கடற்படைகளுக்கு அடுத்தபடியாக உலகின் வல்லமை மிக்க கடற்படையாக இருந்தது. சுல்தான் அப்துல் 2ம் ஹமீதின் காலப் பகுதியில் எகிப்து, சிரியா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரத்து 300க்கும் அதிகமான பத்திரிகைளும், சஞ்சிகைளும் வெளிவந்தன. அல் அஹ்ரம், ரஷீத் ரிழா அவர்களால் வெளியிடப்பட்ட அல் மனார் சஞ்சிகைளுகம் இதே காலத்தில் வெளியிடப்படன.1905ம் ஆண்டு ஜூலை மாதம் 21ம் திகதி வெள்ளிக்கிழமை........ சுல்தான் பள்ளிவாசலில் இருந்து வெளியேறி 42 செக்கனில் குண்டை வெடிக்கைச் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வழமைக்கு மாற்றமாக சுல்தான் 2ம் அப்துல் ஹமீத் அவர்கள் இஸ்லாமிய கிலாபத்தின் பிரதம முப்தியாக இருந்த ஷெய்குல் இஸ்லாமுடன் உரையாட ஆரம்பித்தார். சுல்தானை நோக்கு குண்டு வீசப்பட்டது. சுல்தான் காயங்களுடன் உயிர்தப்பினார். ஒரு சில செக்கன்கள் தாமதமடைந்ததால் சுல்தான் காப்பாற்றப்பட்டார். சம்பவத்தில் சுல்தானின் 28 மெய்ப்பாதுகாவலர்கள் உயிரிழந்தார்கள். சுல்தானுக்கு எதிராக Armenian Revolutionary Federation மேற்கொண்ட கடைசி படுகொலை முயற்சி இதுவாகும் என்று ஓஸ்ரிய நாட்டின் எழுத்தாளர் Erich Feigl தனது A Myth of Terror: Armenian Extremism, Its Causes and Its
Historical Context என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். சுல்தான் 2ம் ஹமீத் சகல அதிகாரங்களையும் கொண்ட இறுதி உஸ்மானிய கலீபாவாகக் கருதப்படுகிறார். சுல்தான் அவர்களை பதவி கவிழ்க்க பிரான்ஸ், பிரித்தானியா, ரஷ்யா போன்ற நாடுகள் மும்முரமான முயற்சிகளை மேற்கொண்டன. சிறுபான்மை கிறிஸ்தவர்களை பாதுகாக்கும் போர்வையில் Armenian Revolutionary Federation ஐ இந்த நாடுகள் இஸ்லாமிய அரசுக்கு எதிராக அடிக்கடி தூண்டுவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தன. பிரித்தானியாவிடம் இருந்து இஸ்லாமிய அரசைப் பாதுகாக்க சுல்தான் அப்துல் ஹமீத் ஜேர்மனியுடன் கூட்டுச் சேர்ந்தார். ஆனால் உஸ்மானியக் கிலாபத்தின் ஒரு பகுதியைத் துண்டாடுவதே ஜேர்மனியின் நோக்கமாக இருந்தது என்பதை அறிந்த சுல்தான் அப்துல் ஹமீத் அவர்கள் தன் மேல் ஒரு கட்டடத்தின் சுவர் விழுந்ததைப் போன்று இருந்ததாக தனது சொந்த நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்துள்ளார். இஸ்லாமிய கிலாபத்தைப் பாதுகாக்க இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா போன்ற நாடுகளின் ஆதரவை சுல்தான் அவர்கள் திரட்டினார்கள். 1881ம் ஆண்டில் தூனிஸியா பிரான்ஸ் படையினரால் கைப்பற்றப்பட்டது. பிரித்தானியா 1882ம் ஆண்டில் எகிப்தை கைப்பற்றியது. இந்தோனேசியா நெதர்லாந்தினால் கைப்பற்றப்பட்டது. மேற்கு நாடுகளில் கல்வி கற்ற தேசிய இளம் துருக்கியர்களினால் சுல்தான் அப்துல் ஹமீதை பதவி கவிழ்பதற்கான முயற்சிகள் தீவரமான முறையில் மேற்கொள்ளப்பட்ன. சுல்தான் அப்துல் ஹமீதை பதவி நீக்குமாறு துருக்கி பாராளுமன்றத்திற்கு தேசிய இளம் துருக்கியர்கள் அமைப்பு தொடர்ந்தும் அழுத்தங்களைப் பிரயோகித்தது. கி.பி 1909ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் திகதி துருக்கி சட்டமன்ற செனட் சபையின் 240 உறுப்பினர்களும் சுல்தான் பதவி விலக வேண்டும் என்று சட்டமூலத்தை நிறைவேற்றினார்கள். அன்றை ஷெய்குல் இஸ்லாம் முஹம்மத் தியாஅத்தீன் எபந்தி சுல்தான் பதவி நீக்கபட்டமைக்கான பத்வாவை வாசித்தார்.பதவி விலகப்பட்டதை அறிவிப்பதற்கான சுல்தானிடம் 4 பேர் அடங்கிய பிரதிநிகள் சென்றார்கள். இதில் இமானுவேல் க்ரஷோவ் என்ற யூதனும் அடங்கியிருந்தான். நாட்டு மக்கள் உங்களைப் பதவியில் இருந்து அகற்றியுள்ளார்கள் என கூறிய போது ஆத்திரம் அடைந்த சுல்தான் அவர்கள் மக்கள் என்னை பதவியில் இருந்து அகற்றினார்கள் என்றால் அதனை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் ஒரு கலீபாவை பதவி விலக்க ஏன் ஓரு யூதனை அழைத்து வந்திருக்கிறீர்கள் என இமர்னுவேல் கிரஷோவை சுட்டிக் காட்டி சுல்தான் கேட்டார். சுல்தான் அப்துல் ஹமீதின் பின்னர் ஆட்சி செய்த 3 கலீபாக்களும் தேசிய இளம் துருக்கியரின் கைபொம்மையாகவே செயற்பட்டார்கள். 33 வருட ஆட்சியின் பின்னர் சுல்தான் 2ம் அப்துல் ஹமீத் 1918ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி இவ்வுலைவிட்டும் பிரிந்தார்கள்.
1924ம் ஆண்டு நவீன துருக்கியின் தந்தை என்று அழைக்கப்படும் முஸ்தபா கமால் அத்தா துருக்கினால் இரத்துச் செய்யப்பட்டது. 1300 வருடங்களாக இருந்த இஸ்லாமிய ஆட்சி அன்று முடிவுக்கு வந்தது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.