ஆரூர் யூஸுப்தீன் 

சில நாட்களுக்கு முன்பு மூன்று செய்திகள் அமெரிக்க முஸ்லிம்களின் பிரச்சனைகளையும் அதன் தீர்வையும் உலகமக்களுக்கு வேலிகொனர்ந்துள்ளது.
வேர்ணன் என்ற பள்ளிக்கூடத்தில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகள்  இஸ்லாமிய மார்கத்திற்கு எதிராக பரப்பட்டும் பொய் பிரச்சாரத்தையும் இனவெறியையும் தடுக்கும் வகையில் ஒரு முயற்சியை எடுத்தனர்..
அம்முயற்சியின் வெளிப்பாடாக அப்பள்ளியில் பயிலும் முஸ்லிம் அல்லாத மாணவிகள் சகமுஸ்லிம் மாணவிகள் அணியும் முக்காடை அணிய விருப்பம் தெரிவித்தனர். மேலும் ஒருவர் அணியும் ஆடையை வைத்து அவரை எடைபோடக்கூடாது என்ற கருத்தை பெரும்பாலான மாணவிகள் கூறினார்.
இந்நிகழ்வை பற்றி பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில்: தற்போதிய காலகட்டத்தில் முஸ்லிம் மாணவராக வாழ்வது அமெரிக்காவில் மிகவும் கடினமான ஒன்று.இம்மாணவிகளின் முயற்சியால் எம்பள்ளியில் இப்பொழுது அப்படிபட்ட நிலையில்லை.
முஸ்லிம் அல்லாத மாணவி ஒருவர் கூறுகையில்: தற்போது எனக்கு இஸ்லாம் என்னும் மார்க்கத்தில் மீது அதிகம் மரியாதை வந்துள்ளது. அவர்கள் போல் ஹிஜாப் அணிய மிகவும் ஆர்வமாக உள்ளேன். முஸ்லிம்கள் பற்றிய பொய்கள் இனி என்னிடம் செல்லாது என்றார்.
கலிபோர்னிய நகரில் உள்ள ஓர் இஸ்லாமிய இறையில்லத்தில் சில மதவெறிபிடித்த கும்பல் தீயிட்டது. வெள்ளியன்று நடைபெற்ற இந்நிகழ்வை பற்றி பள்ளிவாசல் இமாம் பேசுகையில் இந்நிகழ்வுக்கு டொனல்ட் ட்ரம்ப் அவரின் பேச்சுதான் காரணம் என்றார்.
டொனால்டின் மதவெறி பேச்சின் காரணமாக சிலர் இஸ்லாமியர்களின் மீது காழ்புணர்ச்சி கொண்டு இத்தாக்குதலை நடத்தியுள்ளனர் என்றார்.
தொடர்ந்து இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்கள் மீது தொடுக்கப்படும் எதிர்மறை தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிற்கும் பிற இன குழுக்களுக்கும் இடையே நடக்கும் சண்டையை யாரும் இஸ்லாத்திற்கும் மேற்குலகத்திற்கும் இடையே நடக்கும் பொற்போல் எண்ணவேண்டாம்.என்றார்.
ஐ.எஸ்.என்பது இஸ்லாம் அல்ல.அமெரிக்க முஸ்லிம்கள் யாரும் தீவிரவாதிகள் அல்ல. இஸ்லாமியர்கள் மீது நடைபெறும் வார்த்தை தாக்குதலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது

.அமெரிக்க முஸ்லிம்கள் அனைவரும் அமெரிக்காவை அதிகம் நேசிக்கின்றனர்.நாட்டிற்காக பல தியாகங்களையும் செய்ய தயாராகவுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top