யஹ்யா அய்யாஷ் 1966 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதி பலஸ் தீனின் மேற்குக் கரையில் பிறந்தார். அவரது ஏழாம் வயதிலே அல்குர்ஆன் முழுவதையும் மனனமிட்டார். உயர்தரத்தில் சிறந்த முறையில் சித்தியடைந்துபல்கலைக்கழகத்திற்கும் தேர்வு செய்யப்பட்டார்.1988 ஆம் ஆண்டு பொறியியல் பீடத்தின் மின் பொறியியல் துறையில் பட்டம்பெற்று வெளியேறினார். என்றாலும் அவருக்கு இரசாயண துறையிலே ஆர்வம் காணப்பட்டது. உயர்கல்விக்காக ஜேர்மன் செல்வதற்கு முயற்சித்த போதும் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை.யஹ்யா அய்யாஷ் தனது சிறியதாயின் மகளை திருமணம் முடித்தார். அல்லாஹ் அவர்களுக்கு பர்ராஃ, யஹ்யா, அப்துல் லதீப் ஆகிய மூன்று குழந்தைகளை அருளினான்.1987 ஆம் ஆண்டிலே பலஸ்தீன் விடுதலைக்காகப் போராடும் ஹமாஸ் இயக்கத்துடன் இணைந்துகொண்டார். அதன் இராணுவப் பிரிவான இஸ்ஸுத் தீன் கஸ்ஸாம் பிரிவின் ஆரம்ப அங்கத்தவராகவும் அய்யாஷ் காணப்பட்டார்.கதாஇப் (கதாஇப் இஸ்ஸுத்தீன் அல் கஸ்ஸாம் - அதாவது இஸ்ஸுத்தீன் அல் கஸ்ஸாம் படைப்பிரிவு. ஹமாஸ் இயக்கத்தின் இராணுவப் பிரிவு இதுதான்) இதில் அவர் ராணுவ தலைவராக இருந்தார் 

இஸ்ரேலிய இயல்பு வாழ்வில் ஒரு செயற்கைப் பூகம்பத்தை ஏற்படுத்திய, பலஸ்தீன போராட்ட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைக் காட்டித்தந்த, 
பலஸ்தீனின் வரலாறு நெடுகிலும் அந்நாள் பேசப்பட்டுக் கொண்டு இருந்த மேலும் இஸ்ரேலிய யூதர்களை கதிகலங்க வைத்த பல தாக்குதல்களை இவர் அறிமுகப்படுத்தி வைத்தார் இதனால் இவரைக் கொல்வதற்காக இஸ்ரேலியர்கள் பல தடவைகள் முயற்சித்தனர். தமக்கு மத்தியில் மாறுவேடத்தில் வாழ்ந்துவந்த அவரைத் தேடிப் பிடிக்க இஸ்ரேலுக்கு நான்கு வருடங்கள் பிடித்தன. இதற்காக அது பெருந்தொகைப் பணத்தையும் செலவிட நேர்ந்தது.

1996 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி வெள்ளிக் கிழமை1 காலையில் தனது தந்தையுடன் தொலைபேசிமூலம் உரையாடிக் கொண்டிருந்த அவருக்கு தெரியாமல் யூத தீவிரவாதிகளால் அவருடைய உறவினர் (துரோகி )யின் மூலம்நயவஞ்சகமாக தொலைபேசியில் வெடிகுண்டு வைத்து தொலைபேசி வெடித்துச் சிதறி அவர் ஷஹீதானார்இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

0 comments:

Post a Comment

 
நாளைய தேசம் © 2013. All Rights Reserved. Design by naalaiyathesham
Top